Pages

Tuesday 4 June 2013

புதுச்சேரி: பிளஸ் 1 சேர்க்கை ஜூலை 1-ல் தொடங்கும்

     புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.
     இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     2013-14-ஆம் கல்வியாண்டில், புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
     எந்த பள்ளியில் பிளஸ் 1 சேர விரும்புகிறார்களோ, அந்த பள்ளியிலேயே விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து வரும் 25-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அப்பள்ளியிலேயே ஒப்படைக்க வேண்டும்.
ஒரு மாணவர், எத்தனை பள்ளிகளில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு முடித்த அப்மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கை அளித்த பின்னர், பிற பள்ளிகளில் பயின்ற மாணவர்களை பிளஸ் 1 சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment